ADDED : ஜூலை 28, 2024 03:58 AM
மதுரை, : மதுரை நகர் மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தென்னிந்திய கபடி போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கியது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன. தளபதி எம்.எல்.ஏ., போட்டியை துவக்கினார். இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசு ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இன்று (ஜூலை 28)மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.