ADDED : ஜூன் 08, 2024 06:18 AM
வாடிப்பட்டி : திருவாலவாயநல்லுார் காலனி தெரு முருகேசன் மகள் போதும்பொண்ணு 23. இவர் 4 மாதங்களுக்கு முன் சமயநல்லுார் தோடனேரி பகுதியில் வசதிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த பாலகுமாரை 33, காதல் திருமணம் செய்தார். தம்பதியர் பர்மா காலனியில் தனியாக வசித்தனர்.
2 மாத கர்ப்பிணியான போதும்பொண்ணு நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக முருகேசன் அளித்த புகாரை தொடர்ந்து சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.