ADDED : ஜூன் 29, 2024 04:35 AM
மதுரை :
குண்டர் சட்டத்தில் கைது
எஸ். ஆலங்குளம் பிரேம்குமார் 39. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.
மேலுார், ஜூன்.29-
தொழிலாளி மீது போக்சோ வழக்கு
கச்சிராயன்பட்டி முனிஷ் 21, கூலித் தொழிலாளி. இவர் 16 வயது மாணவி ஒருவருடன் பழகினார். ஓராண்டு பழக்கம் காரணமாக மாணவி கர்ப்பமானார். மேலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா, போக்சோ சட்டத்தின் கீழ் முனிஷ் மீது வழக்குப்பதிவு செய்தார்.