/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம் இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்

நீட் எளிதே
ராகேஷ் கண்ணன், தெப்பக்குளம்: மகாத்மா குளோபல் கேட்வே சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தேன். 'நீட்' நுழைவு தேர்வில் 706 மதிப்பெண்பெற்றேன். அப்பா பிரதீப் டாக்டர். இதனால் நானும் டாக்டராக வேண்டும் என்ற கனவில் படித்தேன். பிளஸ் 1 படிக்கும் போதே பள்ளியில் ஏற்பாடு செய்த கோச்சிங் மையத்தில் படித்தேன். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைத்தனர்.
இஷ்டம் என்றால் கஷ்டமில்லை
பூஜா, திருமங்கலம்: அனுப்பானடி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி போதி கேம்பஸில் படித்தேன். இத்தேர்வில் 690 மதிப்பெண் பெற்றேன். பிளஸ் 1ல் இருந்தே வழக்கமான பாடங்கள் தவிர தினம் 6 மணி நேரம் ஒதுக்கி இத்தேர்வுக்கு படித்தேன். அதிகம் விரும்பி படித்த வேதியியலில் அதிக மதிப்பெண் கிடைத்தது.
8 மணி நேரம் படிப்பு
வைஷ்ணவி, ரிசர்வ்லைன்: நரிமேடு கே.வி., பள்ளியில் படித்தேன். 648 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியில் கோச்சிங் கொடுத்தாலும் தனியார் கோச்சிங் சென்டரிலும் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இந்தாண்டு தினமலர் நடத்திய மாதிரி 'நீட்' தேர்வில் பங்கேற்று 534 மதிப்பெண்கள் பெற்று 'டாப் 20' மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றேன்.
கை கொடுத்த கைடு
ரக் ஷனா, மீனாம்பாள் நகர்: சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் படித்தேன். 612 மதிப்பெண்கள் பெற்று அரசு, உதவிபெறும் பள்ளிகளில் முதலிடம் பிடித்தேன். அரசு ஏற்பாடு செய்த கோச்சிங் மையத்தில் சேர்ந்து படித்தேன். பாடவாரியாக அனுபவம்வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்தது பயனுள்ளதாக இருந்தது. என்.சி.இ.ஆர்.டி., தரத்திலான சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டன. அதில் இருந்து பெரும்பாலான வினாக்கள் தேர்வில் கேட்கப்பட்டன.