Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் பணம் இரட்டிப்பு; ரூ.19.80 லட்சம் மோசடி

மதுரையில் பணம் இரட்டிப்பு; ரூ.19.80 லட்சம் மோசடி

மதுரையில் பணம் இரட்டிப்பு; ரூ.19.80 லட்சம் மோசடி

மதுரையில் பணம் இரட்டிப்பு; ரூ.19.80 லட்சம் மோசடி

ADDED : ஜூலை 02, 2024 06:13 AM


Google News
மதுரை : மதுரையில் இரிடியத்திலான கலசத்தை விற்ற ரூ.300 கோடியை பெற ரூ.19.80 லட்சம் தேவைப்படுவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக 2 பெண்கள் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை புதுாரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி 49. துணிகளை டிரை கிளினிங் செய்ய கடைக்கு செல்லும்போது ஜவஹர்புரத்தைச் சேர்ந்த சண்முகவள்ளி அறிமுகமானார். தொடர்ந்து நட்பாக சந்தித்து வந்த நிலையில், தன்னிடம் இரிடியத்திலான கலசம் இருந்ததாகவும், அதை ரூ.300 கோடிக்கு விற்றதாகவும் ராஜேஸ்வரியிடம் சண்முகவள்ளி கூறினார். இதை நம்பியவரிடம் ரூ.300 கோடியை தன் மகன் வினோத் வங்கி கணக்கிற்கு மாற்ற ரூ.12.80 லட்சம் தேவைப்படுகிறதுபணம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக்கி தருவதாக சண்முகவள்ளி கூறினார்.

இதை நம்பி ராஜேஸ்வரி பணம் கொடுத்தார். அந்த பணத்தை ேஷர் மார்க்கெட்டில் சண்முகவள்ளி குடும்பத்தினர் முதலீடு செய்தனர்.

இதையறிந்த ராஜேஸ்வரியிடம், 'நீங்களும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்' எனக்கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.

சண்முகவள்ளி, மகன் வினோத், மனைவி அர்ச்சனா மீது புதுார் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us