மதுரை : மதுரை திருப்பாலை சாரதி நகர் மாரியம்மன், கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் விளக்கு பூஜை நடந்தது.
பொங்கல் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆன்மிக பக்தர்கள், விழாக்குழுவினர், ஆலய பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.