ADDED : ஜூன் 11, 2024 06:41 AM
மதுரை : கால்நடைகளுக்கான கோமாரி (காணை) நோய் தடுப்பூசி முகாமை தனக்கன்குளத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநர் நந்தகோபால் துவக்கி வைத்தார்.
ஊராட்சி தலைவர் ஆனந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மதுரை, திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர்கள் பழனிவேலு, சரவணன், நோய் புலனாய்வு பிரிவு, பன்முக மருத்துவமனை உதவி இயக்குநர்கள் கிரிஜா, சரவணன், டாக்டர் ஜோசப் அய்யாதுரை, உதவி டாக்டர்கள் நாகஜோதி, வீர மணிகண்டன், வசந்த், கோபி, ஓவியஜீவிதா கலந்து கொண்டனர். ஜூலை 10 வரை ஆங்காங்கே நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்.