Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

ADDED : ஜூலை 12, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
மதுரை: பாரம்பரிய கிடா முட்டுவோர் நலச் சங்கம் தலைவர் பிரகாஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆக.,18 ல் கிடாமுட்டு போட்டி நடத்த உள்ளோம். இது பழங்காலத்திலிருந்தே ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அனுமதி கோரி உசிலம்பட்டி தாசில்தார், ஆர்.டி.ஓ., விற்கு மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இது ஒரு கலாசார நிகழ்வு என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க தாசில்தார் 2 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us