ADDED : ஜூலை 28, 2024 05:58 AM
திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ரோட்டரி கிளப் சார்பில் குருபூர்ணிமா விழா நடந்தது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து கூறி சந்தனம், குங்குமம் பூசி ஆசி வழங்கினர். முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.
செயலாளர் குமரேஷ் பேசுகையில், ''குரு மரபிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கக்கூடியது நாடு இந்தியா. அறியாமை அகற்றி ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்பவர்கள் குரு. அவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி மாணவர்கள் நடக்க வேண்டும்'' என்றார்.