ADDED : ஜூலை 30, 2024 05:54 AM
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மருத்துவமனை நிர்வாகிகள் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். கண்களை பாதுகாப்பாக வைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.