Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 12, 2024 06:12 AM


Google News
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணைத் தாசில்தார் மாதவன் தலைமையில் நடந்தது.

தலைமை சர்வேயர் முருகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண் அலுவலர் நரேஷ்குமார், பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் குபேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய விவசாயிகள், ''திரளி கண்மாயில் மதகு உருளை இல்லை. மழைநேரம் நிரம்பும் கண்மாய் தண்ணீரை அடைக்கமுடியாமல் அருகே வயல்வெளிகளுக்கு பாய்ந்து வீணாகிகிறது. பொதுப்பணித்துறைக்கு பலமுறை புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் விதைகள், பழக்கன்றுகள் தரமானதாக இல்லை. மலட்டுத்தன்மையுடன் வழங்குவதால் அவற்றால் பயன் இல்லை. வேளாண்துறை மூலம் வழங்கப்படும் விதைகளை, ஆய்வுக்கு உட்பட்டு வழங்குவதால் பலன் அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் விதைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், கோயில் நிலங்கள் பதிவு செய்யப்படுகின்றனவா என அதிகாரிகள் சர்வே செய்து முறையாக நிலங்களை பதிவு செய்யவேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us