ADDED : ஜூலை 12, 2024 04:46 AM
மேலுார்: மேலுாரில் இ.கம்யூ., மலவெட்டி கண்மாய் பாசன விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர் தலைமை வகித்தார். நரசிங்கம்பட்டி, மலவெட்டி கண்மாய் பாசன விளை நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தாசில்தார் முத்துபாண்டியன், 'அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' எனக் கூறியதால் உண்ணா விரதத்தை கைவிட்டனர். நிர்வாகிகள் திலகர், சுரேஷ்குமார் பங்கேற்றனர்.