ADDED : ஜூன் 04, 2024 06:34 AM
மதுரை : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடக்கவுள்ள நிலையில் மதுரைக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.
அரசு மருத்துவக்கல்லுாரியில் இன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை தெற்கு, மத்தி, மேற்கு சட்டசபை தொகுதிகளுக்கு பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுஉள்ளார். மேலுார், மதுரை கிழக்கு, வடக்கு தொகுதிகளுக்கு சுபாஷ் சாந்தாராம் போர்க்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.