ADDED : ஜூலை 28, 2024 04:56 AM

மதுரை, : பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, மேயர் இந்திராணி பொன்வசந்த், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, கவுன்சிலர் ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாடிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.