/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு
தி.மு.க., அரசு தோற்றுப்போய்விட்டது: கள்ளச்சாராயத்தை கண்டித்து நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கொதிப்பு

போலீஸ் மீது நம்பிக்கை இல்லை
தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன், மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் ஆர்ப்பாட்டம் நோக்கம் குறித்து பேசினர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா பேசுகையில், ''கள்ளக்குறிச்சிக்கு முதல் ஆளாக பழனிசாமி சென்றபிறகுதான் பிற எதிர்க்கட்சிகளுக்கு கண் தெரிந்தது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை அங்கு செல்லவில்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
கோர்ட் அவமதிப்பு ஆகாதா
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசுகையில், ''சி.பி.ஐ., விசாரணை கேட்டு கோர்ட்டில் அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி 'சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை' என்று கூறுவது கோர்ட் அவமதிப்பு ஆகாதா. மக்கள் உயிர்காக்கும் பிரச்னை குறித்து சட்டசபையில் முதலில் பேச முதல்வர் அனுமதித்து இருக்க வேண்டும்.
வெட்ககேடானது
மதுரை நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசுகையில், ''தமிழகத்தில் வயது வித்தியாசமின்றி போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் தருவதால், புதைத்த உடலை தோண்டி கள்ளச்சாராயத்தால் இறந்தாரா என மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இது வெட்ககேடானது.