ADDED : ஜூலை 19, 2024 05:50 AM
மதுரை: பார்லிமென்டில் செங்கோல் நிறுவியதை அவதுாறு பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசனை கண்டித்து, மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார். கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், மாவட்ட செயலாளர் ஹரிஹரன், பொதுச் செயலாளர் மாதவகண்ணன், கேசவ பெருமாள், செயலாளர் வாசு என்ற ராஜசேகர், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் தங்கவேல்சாமி, மீனவர்களின் மாவட்ட தலைவர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.