ADDED : ஜூன் 09, 2024 04:01 AM

திருமங்கலம் : திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் ரத்த சேமிப்பு வங்கி பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுவோர் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகள், ரத்த சேமிப்பு வங்கிகளை நாட வேண்டி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ரத்த சேமிப்பு வங்கியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.