ADDED : ஜூன் 23, 2024 04:12 AM
திருமங்கலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்து திருமங்கலத்தில் மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தலைவர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தரவு மேலாண்மை பிரிவு மாநில துணைத்தலைவர் வேல்முருகன் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளர்கள் பாரதிராஜா, சிவலிங்கம், துணைத் தலைவர் சரவணகுமார், நகர் தலைவர் விஜயேந்திரன், மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, ராக்கப்பன், ஜெயக்குமார், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் சோமசுந்தரம், துணைத்தலைவர் பாலமுருகன் உட்பட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.