Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.16,000 விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது

ரூ.16,000 விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது

ரூ.16,000 விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது

ரூ.16,000 விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது

ADDED : ஜூன் 19, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம், திடியனைச் சேர்ந்தவர் முருகன், 50. இவரது மனைவி வனிதா. இவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலம் மற்றும் அவரது மனைவி பெயரில் மேலும் 2 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டுள்ளார். அறுவடையான, 277 மூட்டை நெல்லை, அம்பட்டயன்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த, பில் கிளார்க் ஜெகதீசன், 39, என்பவர், மூட்டைக்கு, 16,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே எடை போட்டு பில் தருவேன் என்றார்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் முருகன் புகார் செய்தார். நேற்று மாலை, நெல் கொள்முதல் மையத்தில், 16,000 ரூபாயை முருகனிடமிருந்து ஜெகதீசன் வாங்கிய போது, மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடியைச் சேர்ந்த ஜெகதீசன், மூன்று மாதங்களாக மாற்றுப்பணியாக இங்கு பணிபுரிந்து வந்த நிலையில் சிக்கி கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us