ADDED : ஜூன் 10, 2024 05:40 AM
பேரையூர், ; ஆந்திர மாநிலத்தில் தற்போது நாவல் பழம் சீசன் நிலவுவதால் அங்கிருந்து வரும் பழங்கள் பேரையூர் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
நாவல் பழம் கிலோ ரூ. 250க்கு விற்கிறோம். இவ்வகை நாவல் பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டது. நாட்டு நாவல் பழங்களைபோல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாக இல்லை. இருந்தாலும் சீசன் காலங்களில் விற்கக்கூடிய பழங்களை விற்பனை செய்கிறோம். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றனர்.