Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

ADDED : ஜூலை 01, 2025 01:11 AM


Google News
ஓசூர், கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா சாலையிலுள்ள நைஸ் ரோடு சந்திப்பில், அம்மாநில ககாலிபுரா வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, வேட்டையாடிய, 4 மான்கள், ஒரு காட்டுப்பன்றியின் உடல், 6 மான்களின் தோல், 74 கிலோ மான் இறைச்சி ஆகியவை இருந்தது. அதனால் காரில் வந்த, 4 பேரை வனத்துறையினர் கைது செய்ய முயன்றனர். அதில், 3 தப்பியோடிய நிலையில், பிரதாப், 31, என்பவரை வனத்துறையினர் கைது செய்து, இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து, 2 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய, 3 பேரை பிடிக்க, வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்துள்ளனர். தப்பிய கும்பல், கர்நாடகா மாநில வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளது. எவ்வளவு ஆண்டுகளாக இக்கும்பல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us