Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

ADDED : மே 12, 2025 02:33 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில் உள்ள ரிங்-ரோட்டில், முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.

தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயல் தலைவர் முத்து-லட்சுமி முன்னிலை வகித்தார். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் தலைவர் நாகராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.அடுத்த, 18 நாட்களுக்கு தொடர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளதாக முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பா.ஜ., முன்னாள் செயற்குழு உறுப்பினர் முனிராஜ், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் மஞ்சுநாத், முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு பொதுச்செயலாளர் பிரபாகர், துணைத்த-லைவர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us