Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

ADDED : மே 16, 2025 01:18 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 13ல் அணைக்கு நீர்வரத்து, 289 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 430 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து கடந்த, 9 முதல், 7 நாட்களாக தலா, 370 கன அடிநீர் அணையின் சிறிய மதகில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 49.70 அடியாக நீர்மட்டம் இருந்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில், 39 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், ஊத்தங்கரை, 34, பாம்பாறு அணை, 28, தேன்கனிக்கோட்டை, 25, கெலவரப்பள்ளி அணை, 25, பெனுகொண்டாபுரம், 22.4, அஞ்செட்டி, 20, கே.ஆர்.பி., அணை, 14.2, ராயக்கோட்டை, 13, கிருஷ்ணகிரி, 10.3, நெடுங்கல், 9.2, போச்சம்பள்ளி, 5.2, சூளகிரி, 5, சின்னாறு அணை, 4, பாரூர், 2.8, என மொத்தம், 257.1 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us