Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போச்சம்பள்ளியில் வரும் 21ல் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

போச்சம்பள்ளியில் வரும் 21ல் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

போச்சம்பள்ளியில் வரும் 21ல் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

போச்சம்பள்ளியில் வரும் 21ல் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

ADDED : செப் 19, 2025 01:04 AM


Google News
கிருஷ்ணகிரி :போச்சம்பள்ளியில் வரும், 21ல், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நடக்கிறது.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்

குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் காலியாக உள்ள, 15 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட, கடந்த ஜூலை 14ல், அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு அனுமதிச்சீட்டு தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. தகுதி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு அதற்குரிய காரணத்துடன் விளக்க கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும், 21 காலை, 10:00 முதல், 11:00 மணி வரை நடக்கவுள்ளது. தேர்வர்கள் எவருக்கேனும் அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை என்றாலும், சந்தேகங்கள் மற்றும் திருத்தங்கள், ஏதேனும் இருப்பின் நாளைக்குள் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us