/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு
பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு
பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு
பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு
ADDED : மே 15, 2025 02:40 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், கார்த்திகேயன், 32. இவர் வாணியம்பாடியில் வனவராக பணியாற்றினார்.
அதே பகுதியில் வன காப்பாளரான பணியாற்றியவர் திவாகர், 27. இருவரும் நேற்று மாலை, 6:00 மணிக்கு ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையை கடந்து சென்றனர். அப்போது, பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை சென்ற கர்நாடக அரசு பஸ், அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


