ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியை சேர்ந்த முனிராமன் மனைவி நஞ்சம்மா, 60; இவரது மகன் ஆனந்த்; இவரை ஆனைக்கல் போலீசார் கடந்த, 6 ம் தேதி மாலை ஏதோ ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் மனமுடைந்த நஞ்சம்மா, நேற்று முன்தினம் காலை, தன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பனசுமானதொட்டி கிராமத்திற்கு வந்தார். பின் அப்பகுதியிலுள்ள ஜித்தேந்திரய்யா என்பவரது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.