ADDED : செப் 30, 2025 01:56 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 363 மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார். அதில், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


