ADDED : செப் 02, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான, 346 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவற்றில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.