Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொக்லைன் உரிமையாளர்கள் அரசம்பட்டியில் வேலைநிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள் அரசம்பட்டியில் வேலைநிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள் அரசம்பட்டியில் வேலைநிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள் அரசம்பட்டியில் வேலைநிறுத்தம்

ADDED : மே 28, 2025 01:25 AM


Google News
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டியில், 50க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களை வைத்து, வாடகை மற்றும் சொந்த பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த, 2 ஆண்டுகளில் பொக்லைன் வாகனங்களின் இன்சூரன்ஸ், உதிரி பாகங்களின் விலை கடும் உயர்வு, சாலை வரி, டிரைவர் கூலி உயர்வு போன்றவற்றால் கடும் இழப்பை சந்தித்து வருவதாக, பொக்லைன் வாகன உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரி பாகங்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டியும், வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும், பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் கட்டுமான பணிகள், விவசாய பணிகள் உள்ளிட்டவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us