Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

ADDED : ஜன 28, 2024 10:21 AM


Google News
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி சுப்பிரமணிய நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த, 23ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சாமல்பட்டி காந்தி நகரை சேர்ந்த பூவரசன், 19, என்பவர் தன் மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என கடந்த, 24ல், சாமல்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று காலை போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி மட்டும் சரணடைந்தார். சாமல்பட்டி போலீசார் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் ஸ்டேஷன் வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கடத்திச்சென்ற நபரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்களுடன் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., சங்கு, ஊத்தங்கரை டி.ஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் பேச்சுவார்த்தை செய்து அவர்களை கலைந்து போகச்செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us