ADDED : மே 23, 2025 01:06 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையில் நேற்று, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டனர். சடலத்தின் முகம் மற்றும் உடல் பகுதி அழுகிய நிலையில் இருந்ததால்
இறந்தவர் யாரென தெரியவில்லை. இறந்தவர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.