ADDED : மே 29, 2025 01:16 AM
சூளகிரி, சூளகிரியிலுள்ள உத்தனப்பள்ளி சாலையில், வி.ஏ.ஓ., கோவிந்தம்மாள் மற்றும் வருவாய்த்துறையனர் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் ஜல்லி கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.