Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 'லோக் அதாலத்'

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 'லோக் அதாலத்'

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 'லோக் அதாலத்'

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 'லோக் அதாலத்'

ADDED : ஜூன் 13, 2025 01:19 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் நாளை, 14ல் 'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான லதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி வரும், 14 சனிக்கிழமையன்று, 'லோக் அதாலத்' என்ற தேசிய மக்கள் நீதிமன்றம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடக்கவுள்ளது.

மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல், வங்கி கடன், தொழிலாளர் நலன், காசோலை மோசடி, வங்கி கடன், உள்ளிட்ட வழக்குகள் மற்றும் சமாதானமாக போகக்கூடிய குற்றவியல் வழக்குகள் நீதிபதிகளை கொண்ட அமர்வுகளை ஏற்படுத்தி தீர்வுக்கு எடுத்துக்

கொள்ளப்படும்.

நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால், முத்திரை தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறும் வாய்ப்பும் உள்ளது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது, மேல்முறையீடு செய்ய

இயலாது.

எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது சட்டப்பணிகள் குழுவிடமோ தெரிவித்து பயனடையலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us