Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டிராக்டர் மீது பள்ளி வேன் மோதல்; எல்.கே.ஜி., மாணவன், பெண் பலி

டிராக்டர் மீது பள்ளி வேன் மோதல்; எல்.கே.ஜி., மாணவன், பெண் பலி

டிராக்டர் மீது பள்ளி வேன் மோதல்; எல்.கே.ஜி., மாணவன், பெண் பலி

டிராக்டர் மீது பள்ளி வேன் மோதல்; எல்.கே.ஜி., மாணவன், பெண் பலி

ADDED : மார் 25, 2025 02:09 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், நர்சரி வகுப்பில் படிக்கும் மாணவ - மாணவியர் 9 பேரை ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை பள்ளியின், 'மாருதி இகோ' வேன் புறப்பட்டது. வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி பந்திகுறி சந்துரு, 22, வேனை ஓட்டினார்.

மாலை, 4:00 மணியளவில், பெத்தனப்பள்ளி பஞ்., வி.ஐ.பி., நகர் அருகே, கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் வேன் சென்ற போது, முன்னால் சென்ற எம்.சாண்ட் லோடு ஏற்றிய டிராக்டர் திடீரென நின்றது. அப்போது, பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியதில், வேனில் அமர்ந்திருந்த குழந்தைகள் அனைவரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டனர்.

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் குழந்தைகள் அனைவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் எல்.கே.ஜி., மாணவர் ஹர்னிஷ், 4, உயிரிழந்தார். டிராக்டரில் அமர்ந்து சென்ற பெரியமோட்டூரை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயா, 45, தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், போகனப்பள்ளி ஷர்வேஷ், 7, சுபேதார்மேடு காருண்யா, 3, அனிஷ்கா, 3, மணீஷ், 8, ஆகிய நான்கு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

வேன் டிரைவர் சந்துரு, நான்கு குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். அவர்களை கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us