Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குடிபோதையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

குடிபோதையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

குடிபோதையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

குடிபோதையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

ADDED : ஜன 08, 2025 07:09 AM


Google News
கிருஷ்ணகிரி: குடிபோதையில், மனைவியை அடித்து கொன்ற கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அரசகுப்பத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 55. குப்பை பொறுக்கும் தொழிலாளி. கடந்த, 2021 ஏப்., 29ல் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவி லட்சுமியை அடித்து கொன்றார். தேன்கனிக்கோட்டை போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர்.இவ்வழக்கு, கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த, மூன்றாண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி சுதா, குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமிக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us