ADDED : ஜூன் 01, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி, பாரதி நகர் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை, மானிய விலையில் வழங்கும் சர்க்கரை,
துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பில் போட்டு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) குமார், தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.