Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

ADDED : ஜூன் 28, 2025 03:48 AM


Google News
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், சுமை துாக்கு-வோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

சின்னமுனியன், சக்தி தலைமையில், 28 தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். வருகை பதிவேட்டில் பெயர் இல்-லாமல் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் பெயரை, வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும். மாநில அளவில் சங்க அங்கீகார தேர்தலை, காலதாமதமின்றி நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, இளம்சிவப்பு அட்டையும், 10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையும் உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்ப-டுத்த வேண்டும். தொழிலாளர்களின் ஆதார் இணைப்பில் ஏற்பட்-டுள்ள குளறுபடிகளை சரி செய்து, வேண்டிய பண பலன்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தினக்கூ-லியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

* போச்சம்பள்ளி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், மாவட்ட சுமை துாக்குவோர் நலச்சங்க துணைத் தலைவர் மற்றும் போச்சம்பள்ளி நலச்சங்க தலைவர் பழனி தலைமையில், 20க்கும் மேற்பட்ட சுமை துாக்குவோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us