Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் அரசு பள்ளி ஹெச்.எம்.,

ADDED : ஜூலை 05, 2024 01:06 AM


Google News
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்-கையை அதிகரிக்க, தன் சொந்த செலவில் சைக்கிள்களை அப்-பள்ளி தலைமையாசிரியர் வழங்கி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பண்டசீமனுார் கூட்-ரோடு அருகே குண்டலானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1986 ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, 38 ஆண்டுகளை கடந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதி மாண-வர்கள் படித்து வந்தனர். தனியார் பள்ளி மோகத்தால் மாண-வர்கள் சேர்க்கை குறைந்தது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 2 ஆசிரியர்களை கொண்டு இயங்கிய பள்ளி, தற்போது ஓராசிரியர் பள்ளியாக மாறியுள்ளது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போது தலைமை ஆசிரியாக பணியாற்றும் வெங்க-டாபதி, தன் சொந்த செலவில் மாணவர்களுக்கு, சிறுவர்களுக்-கான சைக்கிள்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த, 10 ஆண்டுகளாக பள்-ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து, ஓராசிரியர் பள்ளியானதால், தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு, பாடங்களையும் நானே எடுத்து வருகிறேன். பள்ளியில், 6 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், அதை அதிகப்படுத்த, 6,500 ரூபாய் மதிப்-புள்ள சிறுவர்களுக்கான சைக்கிளை, சொந்த செலவில் வழங்கி வருகிறேன். கடந்தாண்டில், 4 மாணவர்களுக்கும், நடப்பாண்டில், 3 மாணவர்களுக்கும் வழங்கியுள்ளேன். அரசு பள்ளியின் சலுகைக-ளோடு, சிறப்பான கல்வியை கொடுக்கவும் முயன்று வருகிறேன். மாணவர்களின் பெற்றோரும் இதை உணர்ந்து, பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்,” என்றார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தனியார் பள்ளியை போன்று கட்டமைப்பை மாற்றி, சுற்றுச்சுவர், குண்டும் குழியு-மான பாதைக்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து பாதையை அரசு சரி செய்து கொடுத்தாலே, அப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர தயாராக உள்ளனர்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us