Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

ADDED : டிச 02, 2025 02:29 AM


Google News
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையோரம் சப்-கலெக்டர் அலுவலகம் இயங்குகிறது. இதன் முன்புள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். அதனால், சப்-கலெக்டர் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, சப்-கலெக்டர் அலுவலகம் முன், நோ பார்க்கிங் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.

அதையும் மீறி வாகனங்களை பார்க்கிங் செய்து சென்று விடுகின்றனர். இதனால் நேற்று சப்-கலெக்டர் அலுவலகம் முன் ரோந்து சென்ற போக்குவரத்து போலீசார், 'நோ பாக்கிங்' பகுதியில் நின்றிருந்த மூன்று கார்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us