ADDED : செப் 05, 2025 01:22 AM
ஓசூர், ஓசூர் அருகே, பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 80. கடந்த, 2ம் தேதி ஆடு மேய்க்க சென்றவர், இரவில் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.
அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், பொம்மாண்டப்பள்ளியில் உள்ள ஏரியில், நேற்று முன்தினம் காலை அவரது சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி முத்தப்பா உயிரிழந்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.