ADDED : ஜூன் 17, 2025 01:45 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சின்ன மட்டாரப்பள்ளி சாமுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 60, கூலித்தொழிலாளி.
இவர் கடந்த, 14ல், இரவு காவேரிப்பட்டணம் எல்.ஐ.சி., அலுவலகம் அருகே, தர்மபுரி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பல்சர் பைக் மோதியதில் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.