Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ADDED : செப் 29, 2025 02:13 AM


Google News
அரூர்:அரூர் பெரிய ஏரி, 160 ஏக்கர் கொண்டது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பியவுடன், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், ராஜகால்வாய் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாணியாற்றில் கலக்கும்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அரூர் பெரியார் நகர், பச்சினாம்பட்டி, குபேந்திரன் நகர், கீழ்பாட்சாபேட்டை, மஜீத்தெரு, கடைவீதி உள்ளிட்ட, பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் தொற்று நோய் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், ராஜகால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us