Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

ADDED : மார் 17, 2025 03:42 AM


Google News
ஓசூர்: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட தலைவர் ஈஸ்வரபாபு தலைமையில், கிருஷ்ண-கிரி மாவட்டம் ஓசூரில், நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழ்நாடு உயர்நிலை, மேல்

நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கையை ஆதரித்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் பங்கேற்று ஆத-ரவு அளித்தார். ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவ-தாக ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார். முதல்வராக ஸ்டாலின் பத-வியேற்று நான்காண்டுகள் ஆகிவிட்டன. முதல்வரிடம் எட்டு முறையும், அமைச்சர் குழுவிடம் நான்கு முறையும் பேச்சு-வார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் முதல்வர் மவுனம் காக்கிறார். இதனால் ஆசிரியர், அரசு ஊழியர் கொந்தளித்துள்ளனர்.இந்த பட்ஜெட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை, ஒட்டு மொத்தமாக ஏமாற்றியது, அரசின் மீது கோபத்தையும், வெறுப்-பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜாக்டோ ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும், 6 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர் பங்-கேற்கும் உண்ணாவிரத போராட்டம் வரும், 23ல் நடக்கிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபையில் அறிவித்தால் போராட்ட பாதையை மாற்றுவோம். இல்லாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us