முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
ADDED : செப் 02, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி:முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டியில் நேற்று, 681 பேர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள், 5ம் நாளாக நேற்று நடந்தது. இதில், பொதுப்பிரிவினருக்கான கேரம் விளையாட்டு போட்டி துவக்க விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். போட்டிகளை, கேரம் சங்கத்தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள், 79 பேர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கபாடி போட்டி யில், 240 பேரும், பேட்மின்டன் போட்டியில், 150 பேரும், பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்கள் 121 பேரும், சிலம்பம் போட்டியில், 91 பேரும் என மொத்தம், 681 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் கடந்த மாதம், 26ல் துவங்கி வரும், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டி கள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.