/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எஸ்.பி., ஆபீசில் பழுதான எலக்ட்ரிக்கல் கருவிகள் ஏலம் எஸ்.பி., ஆபீசில் பழுதான எலக்ட்ரிக்கல் கருவிகள் ஏலம்
எஸ்.பி., ஆபீசில் பழுதான எலக்ட்ரிக்கல் கருவிகள் ஏலம்
எஸ்.பி., ஆபீசில் பழுதான எலக்ட்ரிக்கல் கருவிகள் ஏலம்
எஸ்.பி., ஆபீசில் பழுதான எலக்ட்ரிக்கல் கருவிகள் ஏலம்
ADDED : ஜூன் 20, 2025 12:56 AM
'
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்திய எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்களில் பழுதானவை கழிவு நீக்கம் செய்யப்பட உள்ளன. அதற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வரும், 25 காலை, 10:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலம் விடும் பொருட்கள் வரும், 24 காலை, 10 மணி முதல், மதியம், 3 மணி வரை காட்சி படுத்தப்பட உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்வோர், அரசு விதிகளின் வழிகாட்டுதல் படி, தகுதிச்சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும், ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அவர்கள் ஏல நாளன்று, 500 ரூபாய்- முன்வைப்பு தொகையை செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். ஏலத்தில், கழிவு பொருட்களை எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன், 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தி பொருட்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.