Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜூலை 05, 2025 01:20 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

அப்போது, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய பேரணி, லண்டன் பேட்டை வழியாக, ராயக்கோட்டை மேம்பாலம், ராயக்கோட்டை ரோடு வழியாக அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நிறைவடைந்தது.

பேரணியில் மாணவ, மாணவியர் போதை பொருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், உதவி ஆணையர் (ஆயம்) பழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us