Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்

சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்

சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்

சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்

ADDED : மே 25, 2025 12:53 AM


Google News
போச்சம்பள்ளி,போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மீண்டும் இரவு, 9:00 மணிக்கு மேல் போச்சம்பள்ளியில் காற்றுடன் மழை பெய்த நிலையில், தர்மபுரி செல்லும் சாலையில், புதுமோட்டூர் பகுதியில், சாலையோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால், திருப்பத்துார் - -தர்மபுரி சாலையில் இரவு, 10:00 மணி முதல், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் போச்சம்பள்ளி போலீசார், சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us