/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 80 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 80 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு
பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 80 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு
பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 80 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு
பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 80 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பு
ADDED : செப் 22, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில், 80 'சிசிடிவி' கேமராக்களை கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள, 72 'சிசிடிவி' கேமராக்கள், ஜெகதேவியில், 4 கேமராக்கள், காட்டூர் எல்லையில், 4 கேமராக்கள் என மொத்தம், 80 'சிசிடிவி' கேமராக்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. இன்ஸ்பெக்டர் இளவரசன் வரவேற்றார். கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
எஸ்.பி., தங்கதுரை தலைமை பேசுகையில், ''பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், நகர மற்றும் கிராம பகுதிகளில் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என கண்டறியப்பட்ட, 80 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் அனைத்தும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.இதையடுத்து, எஸ்.பி., மற்றும் கலெக்டர் ஆகியோர் 'சிசிடிவி' கேமாரக்களை துவக்கி வைத்து, பர்கூர் எம்.ஜி.ஆர்., நகர் இருளர் காலனியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், தாசில்தார் சின்னசாமி, பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் கஸ்துாரி, பாலகிருஷ்ணன், வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.