Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

ADDED : ஜூன் 23, 2025 05:08 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பொன்மலை கோவில் கிராமத்தை சேர்ந்-தவர் பழனிசாமி, 40. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள இந்தோ -- திபெத் எல்லை காவல்படையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மாயா, 34. கடந்த, 16ம் தேதி காலை, 8:30 மணிக்கு, தன், 13 வயது மகள், 10 வயது மகனுடன் வீட்டிலிருந்து சென்ற மாயா மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் பழனிசாமி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சந்தேகத்தின் பேரில் பொன்மலை கோவில் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவ-ரையும், மாயா மற்றும் குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர், 16 வயது மாணவி, அரசு பள்-ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், பாறைக்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஜீவா, 22, மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்-கின்றனர்.

பேரிகை அருகே அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் மகள் ஷிராவாணி, 19. கிருஷ்ணகிரியில் தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 20 இரவு, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், கே.என்., தொட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்ரம், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us