Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கள்ளக்காதலனுடன் வாழ கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

கள்ளக்காதலனுடன் வாழ கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

கள்ளக்காதலனுடன் வாழ கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

கள்ளக்காதலனுடன் வாழ கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

ADDED : ஜூலை 01, 2025 01:45 AM


Google News
திருப்பத்துார், இன்ஸ்டா மூலம் பழகியவருடன் வாழ, கணவனை கொன்ற மனைவி மற்றும் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு கவரன் வட்டத்தை சேர்ந்தவர் விஜயன், 35, டிரைவர். இவர் மனைவி வெண்ணிலா, 28. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த மார்ச், 17 இரவு, வீட்டில் விஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திம்மம்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வந்த உடற்கூறு ஆய்வில், விஜயனை மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. சந்தேகத்தின் படி, அவர் மனைவி வெண்ணிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த சஞ்ஜெய், 27, என்பவருடன் இன்ஸ்டா மூலம், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

சஞ்ஜெய் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். வெண்ணிலா, சஞ்ஜெய்யுடன் சிங்கப்பூர் சென்று வாழ ஆசைப்பட்டார். இதற்காக கடந்த, மார்ச், 17ல் இரவு, விஜயன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, வெண்ணிலா மற்றும் அப்பகுதியை சேர்ந்த, அக்ரஹாரத்தை சேர்ந்த சபரிவாசன், 21, அழகிரி, 23, நாயன செருவு பகுதியை சேர்ந்த சக்திவேல், 22, நந்தகுமார், 24, ஆகியோருடன் சேர்ந்து, விஜயனின் கை, கால்களை கட்டி, முகத்தை தலையணையால் அழுத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வெண்ணிலா மற்றும், 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us